Sunday 15 December 2013

செய்திகள்

OFC  வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை உரிய நேரத்தில் நீக்கவும், OFC செயல்திறனை அதிகப்படுத்தவும்  உரிய ஏற்பாடுகளை செய்யக்கோரி மாநில முதன்மைப் பொதுமேலாளர்களுக்கு CORPORATE அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. தேவையெனில் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணியை தனியாருக்கு விடுவது OUTSOURCING பற்றியும் திட்டமிட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 BSNL ஊழியர் குடியிருப்புக்களின் மாத வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச உயர்வு ரூ.10/=. அதிகபட்ச உயர்வு  ரூ.605/= . 
01/07/2013ல் இருந்து வாடகை உயர்வு அமுலுக்கு வரும். 
உத்திரவு தேதியான 11/12/2013க்கு முன் குடியிருந்து 
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.

சென்ற நிதியாண்டில் 2012-13ல் 
நமது நிறுவனத்தின் மொத்த வருமானம் 27128 கோடி. 
இதில் ஊழியர் சம்பளம் 13758 கோடியாகும். 
மொத்த வருமானத்தில் 50 சதம் சம்பளமாக செல்கின்றது.   
நிர்வாகச்செலவு 8780 கோடியாகும். 
1623 கோடி பராமரிப்புச்செலவாகும். 
மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவு 2533 கோடி. 
IUC செலவு 2259 கோடியாகும். 
 மொத்தத்தில்  7773 கோடி நட்டம் என காட்டப்பட்டுள்ளது. 
ஆனால் தேய்மானச்செலவு மட்டும் 8336 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 
BSNLலில் வருமானம் தேய்ந்து வருகின்றது. 
ஆனால் தேய்மானம் வளர்ந்து வருகின்றது. 

JAO தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் காலியிடங்கள் இல்லாததால் 
பதவி உயர்வு அடைய முடியாத தோழர்கள் காலியிடங்கள் உள்ள மற்ற மாநிலங்களுக்கு செல்ல  தயாராக இருந்தனர். ஆனால் அவர்களது  கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்பில்லை 
என மாநிலச்சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட  8 மாநிலங்களில் மட்டும் இன்னும் 
JTO 35 சத காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்  தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் நிலவுவதாக BSNL நிர்வாகம் கடிதம் மூலம் நமது மத்திய சங்கத்திற்கு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment