Sunday 29 December 2013

செய்திகள் 

தந்தி மூன்றாம் பிரிவின் மாநிலச்செயலராகப்பணி புரிந்த தோழர்.TS.இராஜன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம். அவரது உடல் மும்பையில் உள்ள MGM மருத்துவமனைக்கு மாணவர்களின் படிப்பு ஆராய்ச்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இறந்தும் பயன் தரும் தோழர்.இராஜன் புகழ் வாழ்க..

SR. TOA தகுதித்தேர்வு 30/03/2014ல் நடைபெற உள்ளது. 
01/07/2013 அன்று 4 ஆண்டுகள் பணி முடித்த TOA தோழர்கள் பங்கு கொள்ளலாம். +2 கல்வித்தகுதி உள்ளவர்கள் நேரடியாக  
WALK IN GROUPல் நியமனம் பெறுவார்கள். 
+2 கல்வித்தகுதி இல்லாத தோழர்கள் தேர்வு எழுத வேண்டும். 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20/01/2014.

தமிழக JCM குழுக்கூட்டம் 28/12/2013 அன்று JCM தலைவர் தோழர்.பட்டாபி செயலர். தோழர்.செல்லப்பா ஆகியோரின் பங்களிப்பில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஊழியர் பிரச்சினை தீர்வில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கிடையே இணக்கமும் ஒன்று பட்ட சிந்தனையும் தேவை என்பதை அகில இந்திய JCM கூட்டமும் தமிழக கூட்டமும் நமக்கு எடுத்துரைத்துள்ளன.

2006க்கு முன் ஓய்வு பெற்ற தோழர்களின் ஓய்வூதிய திருத்தம் 15/01/2014க்குள் முடிக்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைப் பணித்துள்ளது. 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமான கோப்பு செலவின இலாக்காவிற்கு 
DEPARTMENT OF EXPENDITUREக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment