Friday 22 November 2013

கிருஷ்ணகிரி....
அமைதிக்கான வாயில்..

சொல்வதை அமைதியாக சொல்வது.. 
கேட்பதை அமைதியாக கேட்பது..
என்ற புரிதலின் அடிப்படையில் 
தமிழ் மாநில செயற்குழு கிருஷ்ணகிரியில் சிறப்புடன் நடைபெற்றது. 

மாநிலத்தலைவர் தோழர்.நூருல்லா தலைமை தாங்க 
அகில இந்திய நிர்வாகிகள் தோழர்கள். ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் 
மூத்த தோழர்கள் சேது,  ஜெயபால்,தமிழ்மணி  சிறப்புரைக்க 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி சிறப்பான கருத்துரைக்க,
மகளிரணி, இளைஞரணித்தோழர்கள் மனங்கவர் உரையாற்ற 
மாவட்டச்செயலர்கள், மாநிலச்சங்கநிர்வாகிகள் 
பிரச்சினைகள் பலவற்றை எடுத்துரைக்க,
ஒலிக்கதிர் பொன்விழா சிறந்திட ஒவ்வொருவரும் உறுதி பூண்டிட 
சிறிய மாவட்டமே ஆனாலும் 
சிறப்பான ஏற்பாடுகளை தருமபுரி நடத்திட 
கிருஷ்ணகிரி செயற்குழு செம்மையுடன்  நடந்தேறி 
அமைப்பை சீரான பாதை நோக்கி திருப்பியுள்ளது.

தோழர்களே..
அமைதிக்கான  வாயிலில்  
அமைதியாகச் செல்வோம்..
அமைதி என்பதே வாயில்தான்..

No comments:

Post a Comment