Friday 6 September 2013

ஒரு COOL கொள்ளை 

தொலைபேசி நிலையங்களில் குளிர் சாதனப் பராமரிப்பிற்காக
(AC UNITS  AMC) மின்பிரிவிலிருந்து (ELECTRICAL WING )
அனுப்ப பட்டிருந்த கணக்கீட்டை கண்டவுடன்
கடுமையாக நமக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது.

வியர்வையின் காரணம்...
வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளியைச் சுரண்டும் சுரண்டல்தான்..

காரைக்குடி மாவட்டத்தில் 9 பெரிய தொலைபேசி நிலையங்களில் 
24 மணி நேர குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதன் பராமரிப்பு பணி மின்பிரிவுக்கு தரப்பட்டுள்ளது. 9 தொலை பேசி நிலையங்களிலும் 24 மணி நேர பணியில் SEMI SKILLED ஊழியர்கள்  நாளொன்றுக்கு 3 SHIFT வீதம் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கணக்கீடு தெரிவிக்கின்றது.

உதாரணமாக காரைக்குடி RSU தொலைபேசி நிலையத்திற்கு  
ரூ.23190/= மாதாந்திர பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. 
இதில் ரூ.3400/= AMC கட்டணமாகவும் 
ரூ.19790/= ஊழியர் சம்பளமாகவும் காட்டப்படுகின்றது.
உண்மையில் நடப்பது என்ன?
எல்லா 9 தொலைபேசி நிலையங்களிலும் 3 SHIFTலும் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஏற்கனவே அங்குமிங்கும் ஒப்பந்த ஊழியர்களாக பணி புரியும் தோழர்களே இந்தப்பணிக்கும் பயன்படுத்தப்படுகின்றார்கள். பெரும்பகுதி பகலில் ஒருவரும் 
இரவில் ஒருவரும் பணியமர்த்தப்படுகின்றார்கள். 
கூலியாக அதிக பட்சம் 
மாதம் 1500 முதல் 2000 வரை மட்டுமே தரப்படுகின்றது. 
9 தொலைபேசி நிலையங்களிலும் மாதம் ரூ.1,78,110/
ஒப்பந்த ஊழியர் கூலியாக இலாக்காவிடம் இருந்து பெறப்பட்டு 
ஒப்பந்த ஊழியருக்கு மொத்தமாக மாதம் 30,000/= வரை மட்டுமே 
கூலியாக கொடுக்கப்படுகின்றது. 
காரைக்குடி மாவட்டத்தில் AC UNIT AMCக்காக ஆண்டிற்கு ஆகும் 
மொத்த செலவு  ஏறத்தாழ 27 லட்சம் ஆகும். 
இதில் அலுவலகங்களில் உள்ள AC UNIT செலவு தனி. 
இந்த 27 லட்சத்தில் ஏறத்தாழ ரூ. 22 லட்சம் 
ஊழியர் கூலியாக இலாக்காவிடம் இருந்து பெறப்பட்டு தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 3 லட்சம் வரை மட்டுமே கூலியாக தரப்பட்டு மிச்சம் கொள்ளை அடிக்கப்படுகின்றது.
மேலும் ஊழியர்களுக்கு EPF/ESI என்ற எந்த வசதியும் இல்லை. 
ஒப்பந்த ஊழியர்களும் விதியை நொந்து வெந்து கிடக்கின்றனர்.

குளிரூட்டும் பணியில் பணி செய்யும் தொழிலாளி வெந்து கிடக்கின்றான்.
ஒப்பந்தக்காரனும் பல லட்சம் சம்பளம் வாங்கும் அவலட்சணங்களும் 
அவனது கொதிக்கும்   வயிற்றில் அடித்து  
கூலாக தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். 

நாளுக்கு நாள் BSNL வருமானம் தேய்ந்து வருகின்றது. 
தமிழக CGM அனைவரிடமும் கருத்து கேட்டுள்ளார். 
வருமானத்தை பெருக்குவது ஒரு புறம் இருக்கட்டும். 
செலவுகளை சரி செய்வதே அதனினும் முக்கியம் ஆகும். 
வரவினும் பெரிது சிக்கனம் ஆகும். 
அதனினும் பெரிது ஊழலையும் ஓட்டைகளையும் அடைப்பது ஆகும்..
காரைக்குடி போன்ற சிறிய இடத்திலேயே ஆண்டிற்கு 20 லட்சம் 
அடிக்க முடியும் என்றால் தமிழகம் முழுவதும் தேசம் முழுவதும் எவ்வளவு கொள்ளை போகின்றது என்பதை நீங்களே கணக்கிடலாம்.

கர்நாடகா போன்ற மாநிலங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் செய்யும் ON/OFF AC பராமரிப்பு பணியை 
நிரந்தர ஊழியர்கள் மற்றும் காவல் பணியில் உள்ளோர் செய்கின்றனர். 
செலவுகளை குறைக்கும் விதமாக 
தமிழ் மாநில நிர்வாகம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
மாநிலச்சங்கமும் ஒப்பந்த ஊழியர் சங்கங்களும்
இப்பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். 
இதை சரி செய்ய வேண்டும்.. 
BSNL நிறுவனம் காத்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment