Wednesday 11 September 2013

BSNL MTNL மறுசீரமைப்பு பற்றி கபில்சிபலுக்கு 
தோழர். குருதாஸ்தாஸ் குப்தா கடிதம் 

நலிந்து வரும் BSNL MTNL நிறுவனங்களின் மறுசீரமைப்பு பற்றி 
AITUC அகில இந்திய பொதுச்செயலர் தோழர். குருதாஸ்தாஸ் குப்தா இலாக்கா அமைச்சர் கபில்சிபலுக்கு பின்வரும் பிரச்சினைகளை தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி உரிய 
நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். 

பிரச்சினைகள் 

1.  BSNL உருவாக்கத்தின் போது அரசு அளித்த
    வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.
2. அலைக்கற்றை SPECTRUM இலவசமாக 
    BSNL/MTNLக்கு அளிக்கப்படவேண்டும்.
3. அலைக்கற்றை கட்டணமாக வசூலிக்கபட்ட 
     18500 கோடியை திருப்பி தரவேண்டும்.
4. மத்திய மாநில அரசுகள் மற்றும்   பொதுத்துறை   நிறுவனங்கள்
    BSNL/MTNL சேவையை பயன்படுத்த உத்திரவிட வேண்டும்.
5. 7500 கோடி கடனுக்கு BSNL செலுத்திய 
    12000 கோடி அநியாய வட்டியைத்திருப்பி தர வேண்டும்.
6. நிலம் மற்றும் கட்டிடங்களை அரசு 
    BSNLக்கு திருப்பி அளிக்க வேண்டும்.
7. வளர்ச்சிக்கு தேவையான கருவிகளை 
    உடனடியாக வாங்க வேண்டும்.
8. TELECOM FACTORYகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு
    அங்கிருந்தே கருவிகள் வாங்கப்படவேண்டும்.
9. விருப்ப ஓய்வு தடுக்கப்பட வேண்டும்.
10. நிறுவன நிர்வாகம் BSNL/MTNL 
     அதிகாரிகளிடமே இருக்க வேண்டும்.
11. பங்கு விற்பனை, தனியார்மயம் கூடாது.
12.தொலைதொடர்பில் அந்நிய மூலதனம் கூடாது.

தோழர். குப்தா பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியிருந்தாலும் கூட 12/09/2013 நடக்கவுள்ள மறுசீரமைப்பு கூட்டத்தில் விருப்ப ஓய்வு பரிசீலிக்கப்படும் என்றும் வெறும் நிதி உதவி அளித்து நிறுவனங்களின் நட்டத்தை சரி செய்ய இயலாது என்றும் அதிகாரிகள் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment