Monday 5 August 2013

டெல்லியில்.. மாநிலச்செயலர்..

ஆகஸ்ட் 3 கருத்தரங்கிற்காக டெல்லி சென்றுள்ள நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி மற்றும் அகில இந்திய அமைப்புச்செயலர் 
தோழர். கோபாலகிருஷ்ணன் மத்திய சங்கத்தலைவர்களுடன் இணைந்து BSNL மற்றும் DOT யின் உயர் அதிகாரிகளை சந்தித்து 
பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர். 
அவற்றில் சில..
  1. ஜூலை  2012 வரையிலான  கருணை அடிப்படை வேலைக்கு ஏறத்தாழ   300 விண்ணப்பதாரர்களுக்கு BSNL நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டாவது ஊதியக்குழுவிற்கு பின் பணிக்கொடை மற்றும்  குடும்ப ஓய்வூதிய பலன்கள் கூடியுள்ளதால்  ஏற்கனவே உள்ள கருணை அடிப்படை வேலைக்கான அளவீடுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
  2. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான 78.2 சத IDA இணைப்பை வழங்க கோரிக்கை விடப்பட்டது. இது சம்பந்தமாக BSNL நிர்வாகத்திடம் DOT சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தக்க பதில் கிடைத்த பின்பு இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று DOT தரப்பில் கூறப்பட்டுள்ளது.
  3. 78.2 சத IDA இணைப்பில் RM மற்றும்  GR'D தோழர்களுக்கு STAGNATION தேக்கநிலை வந்துவிட்டதால் அவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை விடப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் நிலையை உரிய உதாரணத்துடன் (with examples) விளக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
  4. BSNL சீரமைப்பு சம்பந்தமாக மந்திரிகள் குழுவிடம் அளிக்கப்பட்ட நமது கோரிக்கை பற்றி நீண்ட அளவில் விவாதம் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment