Thursday 22 August 2013

அதிகாரிகள் சங்கங்களுக்கான 
புதிய அங்கீகார விதிகள் 

அதிகாரிகள் சங்கங்களுக்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டு அந்த குழு தனது பரிந்துரைகளை தந்துள்ளது.
 புதிய அங்கீகார விதிகளுக்கான நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதன் மீதான கருத்துக்களை அதிகாரிகள் சங்கங்கள் 31/08/2013க்குள் தெரிவிக்க வேண்டும்.

நகல் அறிக்கையில் சில..
  • 3 ஆண்டுக்கொரு முறை தேர்தல் நடைபெறும்.
  • தேர்தல் CHECK OFF முறையில் சந்தா பிடித்தத்தின் மூலம் நடைபெறும்.
  • 35 சதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் முதன்மைச்சங்கமாகவும், 15 சதத்திற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் இரண்டாவது SUPPORTIVE அமைப்பாகவும் அங்கீகரிக்கப்படும்.
  • ஓய்வு பெற்றவர்கள் பதவியில் இருக்க முடியாது.
  • ஒருவர் இரண்டு அமைப்புக்களில் /சங்கங்களில் பதவியில் இருக்க முடியாது.
  • தலைவர்,உதவித்தலைவர்,செயலர்,உதவிச்செயலர் மற்றும் பொருளர் பதவிகளில் 4 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. 
  • செயலர்,உதவிசெயலர் மற்றும் பொருளர் பதவிகளுக்கு மாற்றல் வசதி உண்டு.
  • அகில இந்திய அளவில் 15 நிர்வாகிகளும், மாநிலத்தில் 9 நிர்வாகிகளும்,மாவட்ட மட்டத்தில் 4 நிர்வாகிகளும் இருக்க வேண்டும்.
  • தங்கள் சங்கத்தின் பத்திரிகை,இணையதளம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment