Tuesday 20 August 2013

ஆகஸ்ட் -21
தோழர். ஜீவா பிறந்தநாள் 

பொதுவுடைமை இவனைப் பெற்றது..
சுயமரியாதை இவனோடு உற்றது...
இலக்கியம் இவனுக்குப் பிறந்தது... 
நேர்மை  இவனிடம் நிறையவே கற்றது..
எளிமை இவனிடம் தோற்றது..
வறுமை வளமாக  இவனோடு வாழ்ந்தது..

பாரதியை உயிர்ப்பித்தான்..
தாய்த்தமிழை தாலாட்டினான்..

இவன்..எழுத்தில் கணல்..
அதை  படிப்போர் இதயம் சுடு மணல்..
இவன் பேச்சில் அனல்.. 
அதை கேட்போர் நெஞ்சு கொதிக்கும் தணல்..

செங்கொடி வீசுமட்டும்..
செம்மொழி வாழுமட்டும்.. 
நிலைத்திருக்கும் இவன் புகழ்..

No comments:

Post a Comment