Sunday 28 July 2013

மரபு மாறா 
மதுரை மாவட்ட  மாநாடு 

மதுரை மாவட்ட மாநாடு 28/07/2013 அன்று மதுரையில் 
தோழர். விஜயரங்கன் தலைமையில் 
அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களின் வாழ்த்துரையுடன்,
அக்கம்பக்கம் மாவட்டச்செயலர்களின் பங்கேற்புடன், 
பொதுமேலாளர் திருமதி.இராஜம் அவர்களின் சீரிய சிறப்புரையுடன், 
 மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்களின் தொலைதொடர்பின் இன்றைய நிலை பற்றிய ஆழமான கருத்துரையுடன் 
சீராக சிறப்பாக நடைபெற்றது.

கூடல் நகரில் நிர்வாகிகள் தேர்வில் ஊடல் வந்திடுமோ 
என்ற அர்த்தமற்ற ஐயப்பாடுகளை களைந்தெறிந்து 
தலைவராக தோழர்.முருகேசன், 
செயலராகத்தோழர். சிவகுருநாதன் 
பொருளராக தோழர். ராஜேந்திரன் 
ஆகியோர்  ஒருமனதாக ஒரே மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"தலைமைப்பொறுப்பில் யார்  இருந்தாலும் இல்லாவிட்டாலும் 
தானே இயங்கக்கூடிய சாசுவத இயக்கங்களை நாம் உருவாக்க வேண்டும்" 
என்ற விவேகானந்தரின் பொன்மொழிக்கு ஏற்ப
  
சாசுவத இயக்கமாம் NFTEன் மரபு காத்திடும் கூட்டமாக மதுரை மாவட்டம் விளங்க நமது மனப்பூர்வ வாழ்த்துகளை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment