Monday 22 July 2013

ஜூலை - 23
வீரமுரசு 
உண்மைத்தியாகி 
சுப்பிரமணியசிவா 
நினைவு தினம் 


பாப்பாரப்பட்டியில்  பாரதபுரம் படைத்தவன்..
வ .உ. சி , பாரதி, சிவா என்ற திரிசூலத்தின் நடுசூலம் அவன் 
வறுமையில் பிறந்தான்.. இளமையை தொலைத்தான்.. 
இறுதி மூச்சு வரை இந்திய விடுதலைக்கு உழைத்தான்..
இவனது இறப்பிற்கு பின்புதான் 
தியாகம் என்னும் சொல் பிறந்தது..
புகழ் நோய் கொண்ட புல்லர்களை பார்க்கின்றோம்..
இவனோ தொழுநோய் கொண்ட பின்பும் 
தாய் நாட்டை தொழுது வாழ்ந்தவன்..
உண்மை தியாகத்தின் ஒளிவிளக்கே..
உன் தொழுநோய் 
நாங்கள் தொழும் நோய்..

No comments:

Post a Comment