Friday 17 May 2013


மே - 17 - இளைஞர் தினம் 
தோழர். ஜெகன் பிறந்த தினம் 

தொழிற்சங்க நடைமுறையில் 
புதிய இலக்கணம் படைத்த 
ஒரு பிரம்மாவின் பிறந்த நாள் இன்று..

இலக்கணம் மாறாமல் இயக்கம் வளர்த்து 
இயக்கத்தை இலக்கியமாக செதுக்கிய 
ஒரு சிற்பியின் பிறந்த நாள் இன்று..


இலக்கணத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த 
இலட்சியத்தலைவனின் பிறந்த நாளில் 
இதயம் தொட்டு உறுதி ஏற்போம்.. தோழர்களே 

எல்லை மீறும் இலக்கணத்தை 
எக்கணமும் எடுத்தெறிவோம்..

தொல்லை தரும்  விமர்சனங்களை 
இக்கணமே துடைத்தெறிவோம் 

வாய் தவறி சொல்லிவிட்டால் 
"வழூ"உவில் அடங்கி விடும் 

வழி தவறி சென்று விட்டால் 
வழுக்கலில் வீழ்த்திவிடும்..

வேதனை வலிகளை மறப்போம்..
சாதனை வழிகளைக் காண்போம்..

தனிவழி தவிர்ப்போம் 
தலைவலி தடுப்போம் 

ஒன்றாய் நிற்போம் 
ஒரு வழி செல்வோம் 

தனக்கென வாழா தனிப்பிறவிக்கு..
நமக்கென வாழ்ந்த நல்லமனிதனுக்கு..
நாம் செய்யும் கைமாறு ஒற்றுமை தவிர வேறென்ன 
  
மாறு இல்லா மனங்களோடு கரம் கோர்ப்போம்..
ஊறு இல்லா ஒற்றுமை படைப்போம்..

ஒற்றுமையாய்  சந்திப்போம்..
ஒற்றுமை பற்றி சிந்திப்போம்..

வாழ்த்துக்கள்.. தோழர்களே..
ந. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர் 
காரைக்குடி மாவட்டச்சங்கம் 

No comments:

Post a Comment