Sunday 28 April 2013



ப.சி. இல்லா பாரதம்...... 


எங்களுக்கு MP.. 
நாட்டுக்கோ  மந்திரி.
ஞாயிறு எல்லோருக்கும் விடுமுறை 
அவருக்கோ வீடு.. முறை 

வாரந்தோறும் வங்கிக்கிளை திறப்பு 
அதுவே அவரது  தனிச்சிறப்பு..

நேற்றைய  ஞாயிறும்  
எங்கள் தெருவிலே வங்கி திறந்தார் 
கூடவே திருவாயும் திறந்தார்..

பாரத தேசத்தில் ஏழைகள் உண்டு..
ஆனால் 
பசி.. பட்டினி  இல்லை..
வங்கிகளாக திறப்போம்..
பசியில்லா பாரதம் படைப்போம்.. என்றார்..

ஆம்...
நமது ஆசையும் அதுவே..
ஏழைகள் உண்டு.. பசி இல்லை என்பது 
எப்பேர்பட்ட தத்துவம்..

இத்தகைய மேல்தட்டு தத்துவார்த்த 
ப.சி. இல்லா பாரதமே..
நமது ஆசையும் ...

No comments:

Post a Comment