Friday 26 April 2013


மதுரையை மீட்போம் 


எதிரிகளிடம் இருந்து மதுரையை மீட்டான் சுந்தரபாண்டியன்.
அல்லவைகளிடம் இருந்து நல்லவைகளை மீட்க 
என்றென்றும் மதுரையே மதுரமான இடம்.

அந்த வகையில் இன்று  27/04/2013 
மதுரையில் கூட்டுறவு நாணயச்சங்க 
தேர்தல்  நடைபெறுகின்றது.

காசேதான் கடவுளடா என்பது பெரியோர் கூற்று.
எனவேதான் 
"நாணயமே நமச்சிவாயம்" என்றும் 
"பைசாவே பரமசிவம்" என்றும் 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்து 
நிலமிசை நீடு வாழ
தொழிற்சங்கத்தினரும் இன்று  துணிந்து விட்டனர்.

அதனால்தான் 
நாணயச்சங்கமும் கூட 
நாணயமற்றவர்களிடம் மாட்டிக்கொண்டு 
நாறிப்போய் கிடக்கின்றது.

தீயதை செய்வது குற்றம் 
அதனை வேடிக்கை பார்ப்பது அதனினும் குற்றம்.
எனவே 
தீமையை அகற்ற மதுரையில் 
மன உறுதியுடன் அணி சேர்ந்து போராடும் 
மதுரையின் மீட்பர்களை வாழ்த்துவோம்.

மீட்புக்கு மதுரை என்பதை 
மீண்டும் நிருபிப்போம் .

3 comments:

  1. மீட்டுக் காத்ததும் மதுரை என்பதை நிரூபிப்போம்.

    ReplyDelete
  2. மீண்டும் நிருபிப்போம் .

    ReplyDelete
  3. கருத்தும் கவிதையும்
    காரைக்குடி சிறப்பு
    களப்பணி தொடரட்டும்
    - வாழ்த்துக்களுடன்
    S.P.மதிவாணன்
    விருதுநகர் முன்னால் மாவட்டச்செயலர்

    ReplyDelete