Thursday 11 April 2013


பகலும்...  இரவும்...


பகல் நேரக்காட்சி 


BSNLலில் இனி நாங்கள்தான் ஒரே சங்கம்... 
ஒரு லட்சத்து இருபதாயிரம் ஓட்டுக்களைப் பெறுவோம்...
60 சத வாக்குகளைப் பெற்று
(எதையும்) அசைக்க முடியாத சங்கமாக விளங்குவோம்...
இந்த தேர்தலுக்குப்பின் NFTE சங்கத்தை 
இருந்த இடம் தெரியாமல் ஆக்குவோம்.
காரைக்குடி NFTE மாவட்டச்செயலரை 
காஷ்மீருக்கு மாற்றுவோம்...

இரவு நேரக்காட்சி 


அம்மா.. தாயே... கதவைத் திறங்கம்மா ...
நான்தானம்மா ..
இரா.பிச்சை.. 
அங்கீகரிக்கப்பட்ட செயலர்..
கதவைக் கொஞ்சம் திறங்கம்மா...

இந்த முறை ஒரே ஒரு ஓட்டு போடுங்கம்மா.. 
உங்களுக்கு புண்ணியமா போகும்..
இல்லை என்றால் 
என் பதவிதான் போகும்...
அம்மா கொஞ்சம் கருணை பண்ணுங்கம்மா 
அம்மா.. அம்மா... அம்மா 

சே .. இவ்வளவு நேரம் 
கழுதையாய் கத்தியும்  கதவு திறக்கலியே..

எப்படி மனசு வரும்?

எட்டு வருஷமா.. ஒண்ணு...   ஒண்ணா... இழந்து  
தொழிலாளர்கள் கழுதையா கத்தினாங்க... 
நாம காதிலேயே விழாம 
கழுதையை விட மோசமா இருந்தோம்...

இப்ப தேர்தல் நேரத்திலே 
நாம கழுதையா கத்தி என்ன செய்ய?
கத்திக்கத்தி
ஏப்ரல் 16ல்.. நம்ம 
கழுத்திலே கத்தி வந்திடும் போல..

பின் குறிப்பு :
மேலே கண்டது கற்பனையோ,கதையோ..
கற்பனை கலந்த கதையோ அல்ல..
BSNLEU தோழர்கள் பகலில்
ஆத்திரத்தில் ,அபஸ்வரத்தில் முழங்குகின்றார்கள்
இரவில் வேதனையில்
ஈனஸ்வரத்தில் முனங்குகின்றார்கள்.
இதுவே உண்மை.

No comments:

Post a Comment